வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

கடந்த 2017ல் பிரபல மலையாள நடிகை ஒருவர் கேரளாவில் காரில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டதாக நடிகர் திலீப் உள்ளிட்ட 10 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் நடிகர் திலீப் மூன்று மாதம் சிறைவாசம் அனுபவித்து பின்னர் ஜாமீனில் வெளிவந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை முடித்து, நடிகர் திலீப் உள்ளிட்ட மூவர் இந்த வழக்கில் குற்றமற்றவர்கள் என கூறி விடுவித்தது. இந்த வழக்கின் முதன்மை குற்றவாளி பல்சர் சுனில் உள்ளிட்ட மீதி ஆறு பேர் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது அந்த ஆறு பேருக்கான தண்டனையை நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதன்படி ஆறு பேரும் 20 வருடங்களுக்கு சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும், அபராதமாக தலா ரூபாய் 50,000 செலுத்த வேண்டும் என்றும் தவறினால் அதற்காக இன்னும் ஒரு வருடம் அதிகம் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதிலும் முதன்மை குற்றவாளியான பல்சர் சுனிலுக்கு இன்னொரு பிரிவின் கீழ் ஐந்து வருடம் கூடுதல் தண்டனை வழங்கப்பட்டாலும் ஒரே சமயத்தில் இந்த இரு தண்டனைகளையும் அனுபவிக்க வேண்டும் என்பதால் அவருக்கும் மொத்தமே 20 வருடம் தண்டனை காலம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.