ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யாவின் 45வது படத்தின் படப்பிடிப்பு இன்று(நவ., 27) பொள்ளாச்சியில் துவங்கி உள்ளது. ஆனைமலை, மாசாணி அம்மன் கோவிலில் சூர்யா மற்றும் படக்குழுவினர் தரிசனம் செய்த பின் படப்பிடிப்பு ஆரம்பமானது.
ஆர்ஜே-வாக இருந்து காமெடி நடிகராக மாறி, கதாநாயகனாகவும், இயக்குனராகவும் உயர்ந்தவர் ஆர்ஜே பாலாஜி. “மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம்” ஆகிய படங்களை என்ஜே சரவணன் என்பவருடன் இணைந்து இயக்கினார்.
அவர் முதல் முறையாக தனியாக இயக்க உள்ள படம்தான் 'சூர்யா 45'. பாலாஜி சொன்ன கதையைக் கேட்டு படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார் சூர்யா. இதற்கு முன்பு விஜய்யையும் சந்தித்து கதை சொல்லியிருந்தார் பாலாஜி. ஆனால், அந்தக் கதையில் விஜய் நடிக்க சம்மதிக்கவில்லை. ஒரு வேளை அந்தக் கதைதான் சூர்யா 45 கதையா என்பது பாலாஜி பின்னால் எப்போதாவது பேட்டி கொடுத்தால் தெரிய வரும்.
ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகச் சொல்கிறார்கள். படத்தின் மற்ற அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம்.