ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
வெற்றிமாறன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் 'விடுதலை 2' படம் அடுத்த மாதம் டிசம்பர் 20ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.
டிரைலரில் இடம் பெற்றுள்ள சில வசனங்கள் உடனடியாக சர்ச்சைக்கு ஆளாகியுள்ளது. டிரைலரின் முடிவில் விஜய் சேதுபதி பேசுவது போல ஒரு வசனம் இடம் பெற்றுள்ளது. “தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டும்தான் உருவாக்குவாங்க. அது முன்னேற்றத்துக்கு வழிவகுக்காது,” என்று பேசுகிறார்.
அந்த வசனம் விஜய்யின் அரசியல் நிலைப்பாட்டை விமர்சிப்பதாக உள்ளதென நேற்று டிரைலர் வெளியான உடனேயே பலரும் கமென்ட் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். சமூக வலைதளங்களில் அந்த வசனத்தை அப்படியே பதிவு செய்து, விஜய்யை பலரும் விமர்சித்தார்கள். அதைக் கண்டு பொறுக்க முடியாத விஜய் ரசிகர்கள் பதிலுக்கு வெற்றிமாறன் பற்றி கமெண்ட் செய்து வருகிறார்கள்.
பொதுவாக தனது திரைப்படங்களில் விஜய்தான் 'பன்ச்' வசனம் பேசுவார். அவர் அரசியலில் இறங்கியதும் அவரை விமர்சித்தும் 'பன்ச்' வசனம் வந்துவிட்டதே என ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.