தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

ஒரு வெற்றிப் படத்தில் நடித்த பிறகும் காணாமல் போன நடிகர், நடிகைகள் நிறைய உண்டு. இது அவ்வப்போது சினிமாவில் நடக்கும் ஒரு விஷயம். அப்படியான ஒன்று 1939ம் ஆண்டே நிகழ்ந்திருக்கிறது. மார்டன் தியேட்டர்ஸ் தயாரித்த வெற்றிப் படங்களில் ஒன்று 'சந்தனத்தேவன்'. டி.ஆர்.சுந்தரம் தயாரித்த இந்த படத்தை எஸ்.நோட்டானி இயக்கி இருந்தார். ஆர்.நாயுடு இசை அமைத்திருந்தார்.
இது ஒரு கற்பனையான சரித்திர கதை. இதில் ஜி.எம்.பஷீர் என்பவர் நாயகனாகவும், பி.பானுமதி என்பவர் நாயகியாகவும் நடித்திருந்தார்கள். இவர் பின்னாளில் வெற்றிகரமாக வலம் வந்த பானுமதி அல்ல. இவர்களோடு எம்.ஆர்.ராதா, பி.எஸ்.ஞானம், யூ.ஆர்.ஜீவரத்னம் உள்பட பலர் நடித்திருந்தனர்.
இதில் நாயகன், நாயகியாக நடித்த ஜி.எம்.பஷீரும், நாயகியாக நடித்த பானுமதியும் இதற்கு பிறகு நடித்ததாக தகவல்கள் இல்லை. இத்தனைக்கும் அந்த காலகட்டத்தில் நடித்த நடிகர், நடிகைகளை விட இவர்கள் அழகாக இருந்தார்கள். இந்த படத்தில் நடித்த எம்.ஆர்.ராதாவும், யூ.ஆர்.ஜீவரத்தினமும் பின்னாளில் வெற்றிகரமான திரைக் கலைஞர்களானார்கள்.