ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் நேற்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சட்டசபை வளாத்தில் உள்ள முதல் அமைச்சர் அலுவலகத்தில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது : உலகில் மிக அழகான கடற்கரை நகரங்களில் புதுச்சேரியும் ஒன்று. சினிமா படப்பிடிப்பு கட்டணம் குறைக்கப்பட்டால், புதுச்சேரியில் சுற்றுலா மேம்படும். நிறைய படப்பிடிப்பு நடைபெறும்.
இந்த ஆண்டு விவாகரத்து ஆண்டு போல. அதனால்தான் திரைத்துறையில் நிறைய விவாகரத்து செய்திகள் வந்துள்ளது. இசையமைப்பாளர் ரஹ்மானுடன் கிட்டத்தட்ட 22 ஆண்டுகளாக பழகியுள்ளேன். அவர் மிகவும் தூய்மையானவர். அவரை போல ஒரு சிறந்த மனிதர் உலகிலேயே கிடைக்க மாட்டார். அதனால்தான் விவாகரத்து அறிவித்த அவரது மனைவியே அவரைப் பற்றி யாரும் தவறாக பேச வேண்டாம் என கூறியுள்ளார். அவர்கள் விவாகரத்து விஷயத்தில் நாம் தலையிட்டு இருக்கக் கூடாது. அவசரப்பட்டு கருத்து கூறிவிட்டோமோ என தோன்றுகிறது.
விஜய்யின் அரசியலை தவிர்க்க முடியாத ஒரு அரசியலாக பார்க்கிறேன். ரஜினி, கமல் அரசியலுக்கு வரும்போது கூட இவர்கள் வந்து என்ன செய்து விடுவார்கள் என விமர்சனங்கள் இருந்தது. அதுபோல விமர்சனங்கள்தான் தற்போது விஜய்க்கும் உள்ளது. ஆனால் அவருடைய எழுச்சி என்பது மிகவும் பிரமாதமாக உள்ளது. எனக்கும் அரசியலில் பயங்கர ஈடுபாடு உள்ளது. நானும் ஒரு நாள் கட்சி ஆரம்பிப்பேன், என் அரசியல் யாரையும் சார்ந்து இருக்காது. புதிய பாதை தொடங்கி என்னுடைய அனைத்து படங்களிலும் அரசியல் உள்ளது. எனக்கும் அரசியல் விருப்பம் உள்ளது, ஆனால் அது இப்போதைக்கு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.