தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ். அவருக்கும் அவரது நீண்ட வருட காதலர் ஆண்டனி தட்டில் என்பவருக்கும் அடுத்த மாதம் திருமணம் என கடந்த இரண்டு வாரங்களாக செய்திகள் வெளிவந்தன.
இரு தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் தனது காதலர் ஆண்டனியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, ‛‛15 ஆண்டுகால உறவு, எப்போதும் தொடரும் கவுண்டிங்... ஆண்டனி - கீர்த்தி” என குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, இன்று காலை தனது அப்பா, அம்மா ஆகியோருடன் திருப்பதியில் பெருமாளை தரிசனம் செய்த பின் அவர் அளித்த பேட்டியில், “அடுத்த மாதம் கோவாவில் எனது திருமணம் நடைபெற உள்ளது. அதற்காக வந்து சாமி கும்பிட்டேன்” என்று கூறியுள்ளார்.
பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே திருமணம் செய்து கொள்ள இருக்கும் கீர்த்தி திருமணத்திற்குப் பிறகு நடிப்பாரா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.