சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
நாகசைதன்யா - சமந்தா ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், நான்கு ஆண்டுகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டார்கள். அதையடுத்து நாகசைதன்யாவுக்கும், நடிகை சோபிதா துலிபாலாவுக்கு இடையே காதல் ஏற்பட்டு அவர்கள் திருமணம் இன்று நடைபெறுகிறது.
இந்த நிலையில் சமந்தா என்ற பெயரில் சோபிதாவுக்கு திருமண வாழ்த்து தெரிவித்த ஒரு பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தது. அந்த பதிவை பார்த்துவிட்டு நடிகை சமந்தாதான் இந்த வாழ்த்தினை தெரிவித்திருக்கிறார் என்று நெட்டிசன்கள் பலரும் கருத்து கூறி வந்தார்கள். ஆனால் தற்போது அந்த பதிவை வெளியிட்டவர் சோபிதா துலிபாலாவின் தங்கையான டாக்டர் சமந்தா என்பது தெரிய வந்துள்ளது.
இப்படி ஒரு தகவல் வெளியானதை அடுத்து, அப்படி என்றால் இனிமேல் தனது மச்சினிச்சியை பெயர் சொல்லி அழைக்கும் ஒவ்வொரு நேரமும் நாகசைதன்யாவுக்கு முன்னாள் மனைவி சமந்தா ஞாபகத்துக்கு வந்து கொண்டே இருப்பார் என்று கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.