ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
இப்போதெல்லாம் பக்கா கமர்ஷியல் படத்தில் பாலிவுட் நடிகர்கள் வில்லனாக நடிப்பது டிரண்டாகி உள்ளது. சஞ்சய் தத், பாபி தியோல் போன்றவர்கள் இப்போதும் நடித்து வருகிறார்கள். ஆனால் 1980களிலேயே இந்த டிரண்ட் தொடங்கி விட்டது. ஜெய்சங்கர், ராதிகா நடித்த பக்கா கமர்ஷியல் படம் 'கன்னித்தீவு'. சயின்ஸ் பிக்ஷனையும், விட்டலாச்சார்யா கதையையும் கலந்து சிறிதும் லாஜிக் இல்லாத ஒரு மேஜிக்கான படத்தை இயக்கினர் டி.ஆர்.ராமண்ணா.
ஜெய்சங்கர், ராதிகாவுடன் சீமா, சி.எல்.ஆனந்தன், ஐசரி வேலன், என்னத்த கண்ணையா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். தனியான ஒரு மர்ம தீவில் அந்த தீவுக்கு வருகிற புதியவர்களுக்கு ஏற்படுகிற திகிலூட்டும் அனுபவம்தான் படம். இந்த படத்தில் காளி என்கிற கொடூர வில்லனாக நடித்தார் அப்போது பாலிவுட்டில் முன்னணி ஹீரோவாக இருந்த ரஞ்சித். எம்.பி.ஷெட்டி என்ற கன்னட நடிகரும் நடித்திருந்தார்.
புதுமையான தந்திர காட்சிகள், திகிலூட்டும் காட்சிகள், சீமாவின் கவர்ச்சியான நடிப்பு, பயங்கர சண்டை காட்சிகள் இவற்றால் படம் நல்ல வசூலை கொடுத்தபோதும் கடுமையான விமர்சனத்தை சந்தித்தது. அதிலும் குறிப்பாக 'பாலிவுட் நடிகர் ரஞ்சித்துக்கு இதெல்லாம் தேவையா' என்கிற அளவிற்கு விமர்சனங்கள் வந்தது. இதனால் இந்த ஒரு படத்துடன் மீண்டும் பாலிவுட்டுக்கே திரும்பி விட்டார் ரஞ்சித்.