ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
டிச.,5ல் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா-2 படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ஹைதராபாத்தில் உள்ள சந்தியா என்கிற தியேட்டருக்கு தனது கணவர் குழந்தைகளுடன் சென்ற ரேவதி என்கிற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான நிகழ்வு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து தெலுங்கானாவிலும் அதிகாலை காட்சிகளுக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நெரிசலில் ரேவதியின் கணவரான பாஸ்கரும் மகளான ஷான்வியும் தப்பி பிழைத்து விட, ரேவதி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அவர்களது மகன் ஸ்ரீ தேஜ் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் தனது மனைவியின் இந்த திடீர் மரணத்தால் அதிர்ச்சியில் இருக்கும் கணவர் பாஸ்கர் கூறும்போது, தான் இப்போது உயிர் வாழ்வதே தனது மனைவி செய்த தியாகத்தால் தான் என்று கூறியுள்ளார். அதாவது கடந்த சில வருடங்களுக்கு முன்பு கல்லீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற போது தன்னுடைய கல்லீரலில் ஒன்றை எனக்கு கொடுத்து எனக்கு மறுவாழ்வு கொடுத்தார் என் மனைவி. ஆனால் அப்படிப்பட்டவர் இன்று என்னை விட்டுப் போய்விட்டார் என கண்கலங்க கூறியுள்ளார். இந்த தகவல் ரசிகர்களை மேலும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.