சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
பிரதர் படத்தை அடுத்து ஜெயம் ரவி நடிப்பில் சீனி, காதலிக்க நேரமில்லை போன்ற படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன. இந்த நிலையில் அடுத்தபடியாக கவுதம் மேனன் இயக்கும் ஒரு படத்தில் அவர் நடிக்கப் போகிறார். தற்போது மம்முட்டி நடிப்பில் டொமினிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ் என்ற படத்தை இயக்கி வரும் கவுதம் மேனன், அந்த படத்தை அடுத்து வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்கப் போகிறார்.
இந்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அந்த படத்தில் ஜெயம் ரவி நடிக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் கவுதம் மேனனும், ஜெயம் ரவியும் முதன் முறையாக இணையப் போகிறார்கள்.
ஏற்கனவே கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்த நிலையில், சம்பள விவகாரத்தில் சிம்புவுக்கும் அந்த நிறுவனத்திற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அதன் காரணமாகவே மீண்டும் அதே நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க கவுதம் மேனன் அழைப்பு விடுத்தபோது அதை சிம்பு நிராகரித்து விட்டதாகவும், அதனால் ஜெயம் ரவி ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.