ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ்நாட்டில் பிறந்தாலும் தற்போது சர்வதே திரைப்பட இசை அமைப்பாளராக இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். ஹாலிவுட் படங்களுக்கு இசை அமைப்பதன் மூலம் ஆஸ்கர் விருதுகளை வென்று உலக புகழ் பெற்றுள்ளார். இதனால் சர்வதேச அளவில் பல பொறுப்புகள் அவரை தேடி வருகிறது.
அந்த வரிசையில் ஏ.ஆ.ரஹ்மானுக்கு இங்கிலாந்தில் உயரிய கவுரவம் கிடைத்துள்ளது. லண்டனில் உள்ள உலக புகழ்பெற்ற இசை நாடகம் மற்றும் சமகால நடனத்துக்கான கன்சர்வேட்டரியான டிரினிட்டி லாபான் இசைப்பள்ளியின் கவுரவத் தலைவராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்த பதவியில் அவர் ஐந்து ஆண்டுகள் பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறும்போது ''இந்த பொறுப்பை பாக்கியமாகவும், மரியாதைக்குரியதாகவும் கருதுகிறேன். இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்குமான உறவை வலுப்படுத்துவதில் நான் ஒரு காரணியாக இருப்பதற்காக மகிழ்ச்சி அடைகிறேன்”என்று தெரிவித்து உள்ளார்.