தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

புஷ்பா 2 படத்தின் முதல்காட்சி திரையிடப்பட்ட போது ரேவதி என்ற 39 வயது பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இது சம்பந்தமாக நேற்று அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்திருக்கிறார். இந்த நிலையில் புஷ்பா-2 படத்தில் நாயகியாக நடித்த ராஷ்மிகா மந்தனா, அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார்.
அந்த பதிவில், ‛‛இப்போது நடப்பதை என்னால் நம்பவே முடியவில்லை. புஷ்பா-2 படத்தின் முதல் காட்சியின்போது ஒரு பெண் உயிரிழந்தது துரதிர்ஷ்டவசமானது. அது மிகவும் வருத்தமானதும் கூட. ஆனபோதிலும் அல்லு அர்ஜுன் என்ற ஒருவர் மீது எல்லா பழியையும் சுமத்துவது வருத்தமளிக்கிறது'' என்று அவர் பதிவிட்டுள்ளார்.
அதையடுத்து தெலுங்கு நடிகர் நானி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‛‛சினிமா துறையினர் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அரசு அதிகாரிகளும் ஊடகங்களும் காட்டும் ஆர்வத்தை சாதாரண மக்கள் மீதும் காட்ட வேண்டும். நடந்து முடிந்தது ஒரு துரதிர்ஷ்டமான சம்பவம். இதிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொண்டு இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எல்லோருமே தவறு செய்பவர்கள்தான். ஆனால் இதற்கு எல்லாம் ஒரே ஒரு மனிதர் மட்டும் பொறுப்பேற்க முடியாது'' என்று பதிவிட்டுள்ளார்.