இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால், தற்போது பரோஸ் என்கிற படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறியுள்ளார். தற்போது வரை பிஸியான நடிகராக நடித்து வந்தாலும் அவருக்குள் இருக்கும் டைரக்சன் ஆசை இப்படி ஒரு படத்தை இயக்கத் தூண்டியது. படமும் நாளை (டிச-25) ரிலீஸ் ஆக இருக்கிறது. வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு வந்து சென்ற வரலாற்று பின்னணியில் இந்த படத்தை 3டியில் உருவாக்கியுள்ளார் மோகன்லால்.
அதேசமயம் பரோஸ் திரைப்படம் தான், தான் இயக்கும் முதலும் கடைசியுமான திரைப்படம் என்றும் இனி அடுத்த படம் இயக்கப் போவதில்லை என்றும் சமீபத்திய பேட்டி ஒன்றில் திட்டவட்டமாக கூறியுள்ளார் மோகன்லால். மேலும் இப்படி முதல் படத்தையே 3டியில் இயக்க வேண்டும் என தோன்றியது எதனால் என்கிற ஆச்சரியமான காரணத்தையும் அவர் கூறியுள்ளார்.
“பொதுவாகவே படங்கள் 3டியில் வெளியாகும் போது பார்வையாளர்களுக்கு என அதற்கேற்ற 3டி கண்ணாடி வழங்கப்படும். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இப்படி கண்ணாடி அணிந்து கொண்டு பார்க்கும் போது கூட காட்சிகள் தெளிவில்லாமல் தெரிவதும், பலருக்கு தலைவலி ஏற்படுவதும் வாடிக்கையாக இருந்து தான் வருகிறது. இப்படி கண்ணாடி அணியாமலேயே பார்க்கும் விதமாக ஒரு 3டி படத்தை ஏன் உருவாக்க முடியாது என்கிற எண்ணம் எனக்குள் தோன்றியது.
இது போன்ற சவாலான முயற்சிகளை மேற்கொள்வது எனக்கு பிடிக்கும். அதனைத் தொடர்ந்து நான் எடுத்த முயற்சிகளின் பலன் தான் இப்போது பரோஸ் திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தை 3டி கண்ணாடி அணியாமலேயே பார்க்க முடியும். அதே சமயம் 3டி படம் பார்த்த அந்த முழுமையான அனுபவம் கிடைக்கும். அதற்கான தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார் மோகன்லால்.