ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால், தற்போது பரோஸ் என்கிற படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறியுள்ளார். தற்போது வரை பிஸியான நடிகராக நடித்து வந்தாலும் அவருக்குள் இருக்கும் டைரக்சன் ஆசை இப்படி ஒரு படத்தை இயக்கத் தூண்டியது. படமும் நாளை (டிச-25) ரிலீஸ் ஆக இருக்கிறது. வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு வந்து சென்ற வரலாற்று பின்னணியில் இந்த படத்தை 3டியில் உருவாக்கியுள்ளார் மோகன்லால்.
அதேசமயம் பரோஸ் திரைப்படம் தான், தான் இயக்கும் முதலும் கடைசியுமான திரைப்படம் என்றும் இனி அடுத்த படம் இயக்கப் போவதில்லை என்றும் சமீபத்திய பேட்டி ஒன்றில் திட்டவட்டமாக கூறியுள்ளார் மோகன்லால். மேலும் இப்படி முதல் படத்தையே 3டியில் இயக்க வேண்டும் என தோன்றியது எதனால் என்கிற ஆச்சரியமான காரணத்தையும் அவர் கூறியுள்ளார்.
“பொதுவாகவே படங்கள் 3டியில் வெளியாகும் போது பார்வையாளர்களுக்கு என அதற்கேற்ற 3டி கண்ணாடி வழங்கப்படும். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இப்படி கண்ணாடி அணிந்து கொண்டு பார்க்கும் போது கூட காட்சிகள் தெளிவில்லாமல் தெரிவதும், பலருக்கு தலைவலி ஏற்படுவதும் வாடிக்கையாக இருந்து தான் வருகிறது. இப்படி கண்ணாடி அணியாமலேயே பார்க்கும் விதமாக ஒரு 3டி படத்தை ஏன் உருவாக்க முடியாது என்கிற எண்ணம் எனக்குள் தோன்றியது.
இது போன்ற சவாலான முயற்சிகளை மேற்கொள்வது எனக்கு பிடிக்கும். அதனைத் தொடர்ந்து நான் எடுத்த முயற்சிகளின் பலன் தான் இப்போது பரோஸ் திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தை 3டி கண்ணாடி அணியாமலேயே பார்க்க முடியும். அதே சமயம் 3டி படம் பார்த்த அந்த முழுமையான அனுபவம் கிடைக்கும். அதற்கான தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார் மோகன்லால்.