ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கத்தாரில் சிக்டா விருதுகள் இந்த வருடம் டிசம்பர் 20ம் தேதி கத்தாரின் புகழ்பெற்ற கத்தார் தேசிய மாநாட்டு மையத்தில் (QNCC) பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியானது சிக்டா நிறுவனர் மற்றும் இயக்குநரான சாதிக் பாஷா மிக விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலத்தில் உள்ள கத்தார் வாழ் ஆளுமைகளை இவ்விருதுகள் 8 பிரிவுகளில் கவுரவித்தன. மேலும் இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக, தென்னிந்திய திரையுலகின் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
இவ்விழாவை பிரபல நடிகை குஷ்பூ, நகைச்சுவை நட்சத்திரம் யோகி பாபு, கன்னட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், பல்துறை திறமை கொண்ட நடிகர்கள் அசார் மற்றும் டி.எஸ்.கே, நடிகை அம்மு ராமச்சந்திரன், நடிகை சுமலதா, நடிகர் விமல், விசுவநாத், மற்றும் குணச்சித்திர நடிகர் ரியாஸ் கான் ஆகியோரின் வருகையால் நிகழ்ச்சியானது தனிச்சிறப்பை பெற்றது.
இந்த நிகழ்வில் 2500க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து, விழாவை சிறப்பித்தனர். தென்னிந்தியர்களின் கலாச்சார மற்றும் கலை நடைமுறைகளைக் கொண்டாடும் சிக்டா விருதுகள், வளர்ந்து வரும் திறமைகளை ஊக்குவிக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக திகழ்கிறது.