பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் |

மலையாளத்தில் இந்த ஆண்டில் வெளியான பிரம்மயுகம், மஞ்சும்மேல் பாய்ஸ், ஆடுஜீவிதம், ஆவேஷம், வர்ஷங்களுக்கு ஷேஷம், பிரேமலு, ஆட்டம், குருவாயூர் அம்பலநடையில், உள்ளொழுக்கு, வாழ, ஏஆர்எம், கிஷ்கிந்தா காண்டம் உள்ளிட்ட சில படங்கள் வெற்றி பெற்று தயாரிப்பாளருக்கு லாபம் கொடுத்தது. இவற்றில் மஞ்சும்மேல் பாய்ஸ், ஆடுஜீவிதம், ஆவேஷம், பிரேமலு, ஏஆர்எம் படங்கள் 100 கோடி ரூபாய் வசூலித்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஆனாலும் பல படங்கள் தோல்வி அடைந்து பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும், இதனால் கோடி கணக்கில் சம்பளம் பெற்ற நடிகர்கள் பணத்தை திருப்பி தரவேண்டும் என்று மலையாள தயாரிப்பாளர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
2024ம் ஆண்டில் மலையாளத்தில் 199 படங்கள் திரைக்கு வந்து 26 படங்கள் மட்டுமே லாபம் பார்த்துள்ளன. இந்த படங்களின் தயாரிப்பு செலவு 1000 கோடி. ஆனால் இந்த படங்களின் மூலம் 350 கோடி மட்டுமே லாபம் கிடைத்துள்ளது. 650 கோடி முதல் 700 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் அவர்கள் ஏற்கவில்லை. இது தொடர்ந்தால் மலையாள சினிமா துறை பெரிய இழைப்பை சந்திக்கும். இதனால், நஷ்டம் அடைந்த படங்களின் நடிகர்களும், உதவி செய்ய முன்வரும் நடிகர்களும் தயாரிப்பாளர்களின் நஷ்டத்தை ஈடு செய்ய உதவ வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.