ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
ஹிந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த குஷ்பு, தமிழில் 'வருஷம் 16' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர். 90களில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக கலக்கிய குஷ்பு, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, சரத்குமார் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதேபோல சிறிய நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்துள்ளார்.
சின்னத்திரையிலும் தனது ஆதிக்கத்தை செலுத்திய குஷ்பு, தற்போது சினிமாவில் குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார். சினிமாவில் குஷ்பு காலடி எடுத்து வைத்து 45 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
7 வயதில் குழந்தையாக நடிக்க தொடங்கிய நான், இன்று 45 ஆண்டுகளை கடந்துள்ளேன். உற்சாகமான இந்த பயணத்தில் நிறைய விஷயங்களை கற்றுள்ளேன். என்னுடன் இணைந்து நடித்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அத்தனை பேருமே சிறப்பானவர்கள்.
ஒரு நடிகை என்பதை தாண்டி வேறு எதையுமே என்னால் நினைக்க முடியவில்லை. இந்த மாபெரும் பயணத்தில் எனக்கு உறுதுணையாக இருந்தவர்கள், எனக்கு ஆதரவு தந்தவர்கள், ஊக்குவித்தவர்கள், விமர்சித்தவர்கள், கற்றுக்கொடுத்தவர்கள், அன்பு செலுத்தியவர்கள் எல்லாவற்றையும் விட என்னை நம்பியவர்கள் அத்தனை பேருக்கும் நன்றி. இனியும் எனது சிறப்பான பங்களிப்பை தொடர்ந்து வழங்குவேன்.
இவ்வாறு குஷ்பு பதிவிட்டுள்ளார்.