தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

சினிமா நடிகை குஷ்பு இயக்குநர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, ஆனந்திகா என்ற இருமகள்கள் உள்ளனர். பிறப்பால் இஸ்லாமியரான குஷ்பு, தற்போது பாஜக கட்சியில் இணைந்து அரசியலில் பயணம் செய்து வருகிறார். இதனையொட்டி சிலர், அவர் திருமணம் செய்து கொள்வதற்காக மதம் மாறிவிட்டதாக குற்றம் சுமத்தி வந்தனர். சமீபகாலங்களில் சோஷியல் மீடியாவிலும் குஷ்புவின் திருமணம் குறித்தும், மதம் மாற்றம் குறித்தும் விவாதங்கள் எழுந்த வண்ணம் உள்ளது.
இதனையடுத்து இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் குஷ்பு பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், 'நான் திருமணத்திற்காக மதம் மாறிவிட்டதாக கூறுபவர்கள் கொஞ்சம் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். நம் நாட்டில் இருக்கும் சிறப்பு திருமணம் சட்டம் குறித்து அவர்கள் நிச்சயமாக கேள்வி பட்டிருக்கமாட்டார்கள். திருமணத்திற்காக நான் எந்த மதத்திற்கும் மாறவில்லை. மதம் மாற சொல்லி யாரும் என்னை வற்புறுத்தவும் இல்லை. என் 23 வருட திருமண வாழ்க்கை மரியாதை, நம்பிக்கை, சமத்துவம் மற்றும் அன்பின் அடிப்படையில் உருவானது' என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார்.