ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நாயகனாக நடிக்க 'டிமான்டி காலனி, டிமான்டி காலனி 2' ஆகிய படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து படத்தின் மூன்றாவது பாகத்திற்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டாராம் அஜய் ஞானமுத்து.
அருள்நிதி நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகிவிட்டார். கதாநாயகி யார் என்பதற்கான தேர்வு நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு பாகங்களின் கதைக்களமும் சென்னையில் இருந்தது. ஆனால், மூன்றாவது பாகத்திற்கான கதைக்களத்தை வெளிநாட்டில் வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளார்களாம்.
அதற்கான இடங்களைத் தேர்வு செய்ய ஐரோப்பாவில் உள்ள மால்டா தீவுகளுக்கு அஜய் ஞானமுத்து சென்றுள்ளதாகத் தகவல். 2025ம் ஆண்டிலேயே படப்பிடிப்பை ஆரம்பித்து அதே வருடத்தில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்கள். தமிழ்ப் படங்களை ஹிந்தியில் டப்பிங் செய்து வெளியிடும் கோல்டுமைன்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கப் போகிறது. விரைவில் படத்திற்கான அறிவிப்பு வெளியாகலாம்.