தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

கடந்த 2015ம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கிய படம் டிமான்டி காலனி. இந்த படம் வெற்றி பெற்ற நிலையில், அதன் பிறகு இமைக்கா நொடிகள், கோப்ரா போன்ற படங்களை இயக்கினார் அஜய் ஞானமுத்து. பின்னர் டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கினார். அந்த படம் 20 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு 80 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் அதே டிமான்டி காலனி படத்தின் மூன்றாம் பாகத்தை தொடங்கி இருக்கிறார் அஜய் ஞானமுத்து. முதல் இரண்டு பாகங்களிலும் நடித்த அருள் நிதியே இந்த படத்திலும் நடிக்கிறார். நாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது.