ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
2025ம் ஆண்டு பொங்கலுக்கு அஜித் நடித்துள்ள 'விடாமுயற்சி', அருண் விஜய் நடித்துள்ள 'வணங்கான்', ஆகிய படங்கள் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தெலுங்கிலிருந்து டப்பிங் ஆகி வரும் 'கேம் சேஞ்சர்' படமும் பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது.
இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு அஜித் நடித்துள்ள ஒரு படம் வரப் போகிறது, கொண்டாடித் தீர்ப்போம் என அஜித் ரசிகர்கள் காத்திருந்தார்கள். ஆனால், அவர்களுக்கு புத்தாண்டுப் பரிசாக அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது தயாரிப்பு நிறுவனம். படம் பொங்கலுக்கு வெளியாகாது தள்ளி வைக்கிறோம் என்று அறிவித்துள்ளார்கள்.
கடந்த சில நாட்களாகவே இப்படம் குறித்து வதந்திகள் பரவி வந்தது. திரையுலகில் விசாரித்த போது அது வேண்டுமென்றே பரப்புகிறார்கள். படத்திற்கு சென்சார் விண்ணப்பம் கூட செய்துவிட்டார்கள் என்றார்கள். ஆனால், கடைசி நேரத்தில் இப்படி தள்ளி வைத்திருப்பது திரையுலகினருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
இதனால், இந்த 2025ம் ஆண்டு ஆரம்பமே தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை தடுமாற்றத்துடன் ஆரம்பமாகிறது.