துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
இயக்குனர் ஷங்கர் இந்தியளவில் பிரமாண்டமான இயக்குனர் என கொண்டாடபடுபவர். கடைசியாக அவரது இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த 'இந்தியன் 2' படம் தோல்வியை தழுவி ஏமாற்றத்தை தந்தது. அதன்பிறகு ராம் சரணை வைத்து ஷங்கர் இயக்கி உள்ள 'கேம் சேஞ்சர்' படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது.
இதற்கான புரொமோசன் நிகழ்ச்சிகளில் ஷங்கர் கலந்து கொண்டபோது அவரின் அடுத்த படம் பற்றி கேள்வி எழுந்த போது அவர் கூறியதாவது, "வேள்பாரி நாவலை படத்திற்கான திரைக்கதையாக முழுவதுமாக தயார் செய்து வைத்துள்ளேன். தற்போது முன் தயாரிப்பு கட்டத்தில் உள்ளது. விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்கும். அதிகாரப்பூர்வமான மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்" என கூறினார்.