தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் நடித்து சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த திரைப்படம் தில்லுக்கு துட்டு 1 மற்றும் 2. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த ஆண்டில் தில்லுக்கு துட்டு 3வது பாகம் ' டிடி ரிட்டர்ன்ஸ்' எனும் பெயரில் வெளியானது. இதனை ராம்பாலாவின் உதவி இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கினார். இப்படம் ஓரளவுக்கு வரவேற்பு பெற்றது.
அதைத்தொடர்ந்து மீண்டும் பிரேம் ஆனந்த் , சந்தானம் கூட்டணியில் 'டிடி ரிட்டர்ன்ஸ்' 2ம் பாகம் உருவாகிறது என்றும் இதனை நடிகர் ஆர்யா தயாரிக்கின்றார் என அறிவித்தனர். அதன்பிறகு இந்த படம் குறித்து எந்த வித அப்டேட் வெளியாகவில்லை. தற்போது இதன் படப்பிடிப்பை சென்னை மற்றும் புதுச்சேரியில் பிரமாண்டமான கப்பலில் கிட்டத்தட்ட முழு படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறதாம். கடந்த பாகங்கள் பெரும்பாலும் ஒரே வீடு அல்லது பங்களாவில் நடைபெற்றது. தற்போது இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதனால் இந்த படத்தின் டீசரை பொங்கல் பண்டிகையையொட்டி வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.