தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்து முன்னனி நடிகையாக வலம் வருபவர். சமீபத்தில் அவரது நீண்ட வருட காதலர் ஆண்டனியை மணந்தார். இதன்பிறகு படங்களில் நடிப்பாரா என்பது குறித்து தெரியவில்லை.
தற்போது முதன்மை கதாபாத்திரங்களில் பல படங்களில் நடித்து வந்தாலும் அவர் முதல்முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த படம் தெலுங்கில் நடிகை சாவித்திரி வாழ்க்கை வரலாற்றை மையமாக உருவான மகாநடி படம் தான். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் முதலில் மகாநடி படத்தில் நடிக்க மறுத்துள்ளார்.
அது ஏன் என அவர் கூறியதாவது, ‛‛மகாநடி படத்தின் கதையை நாக் அஸ்வின் என்னிடம் கூறியபோது சாவித்திரி கதாபாத்திரத்தில் நடிக்க பயந்து மறுத்துவிட்டேன். அந்த படத்தின் தயாரிப்பாளர்கள் நான் ஏன் நடிக்க மறுத்தேன் என கேட்டபோது, அந்த கதாபாத்திரத்தை என்னால் சரியாக திரையில் கொண்டுவர முடியுமா? இல்லையா? என்ற பயம் மற்றும் தயகத்தினால் அதை நிராகரித்தேன் என கூறினேன். பின்னர் அனைவரும் தந்த ஊக்கத்தினால் நடித்தேன்'' என்றார்.