பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் | சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் |
இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்ட வீராங்கனையும் வெள்ளையர்களை எதிர்த்துப் போரிட்டு வெற்றி கண்ட ஒரே அரசியுமான வேலு நாச்சியாரின் வரலாறு 'வீரமங்கை வேலுநாச்சியார்' என்ற பெயரில் படமாக தயாராகி வருகிறது. டிரண்ட்ஸ் சினிமாஸ் சார்பில் ஜெ .எம்.பஷீர் தயாரிக்கும் இத்திரைப்படத்தை 'ஊமைவிழிகள்' படத்தின் இயக்குனர் ஆர். அரவிந்தராஜ் இயக்குகிறார். வேலுநாச்சியாராக ஆயிஷா என்ற புதுமுகம் நடிக்கிறார்.
படத்தின் மோஷன் பிக்சர் டீசர் வேலுநாச்சியாரின் பிறந்த நாளான நேற்று வெளியிடப்பட்டது. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு லண்டனில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. படத்தை அடுத்த ஆண்டு ஜனவரி 3ம் தேதி வேலு நாச்சியாரின் பிறந்த நாள் அன்று வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.
இதுகுறித்து தயாரிப்பாளர் ஜெ.எம்.பஷீர் கூறும்போது, "வேலு நாச்சியார் வாழ்க்கை வரலாற்றை திரையில் கொண்டு வருவதில் மிகவும் பெருமை அடைகிறோம். இதில் முதன்மை வேடத்தில் எனது மகள் ஆயிஷா நடிப்பது பெரும் மகிழ்ச்சி. வரலாற்று ஆவணங்களை ஆய்வு செய்து இப்படத்தின் ஸ்கிரிப்ட் உருவாக்கப்பட்டுள்ளது வேலுநாச்சியாரின் பிறந்தநாள் அன்று இந்த டீசரை வெளியிட்டு இருப்பது இரட்டிப்பு சந்தோஷம்," என்றார்.