ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழில் ஜீவா இரு வேடங்களில் நடித்த 'சிங்கம்புலி' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் மலையாள நடிகை ஹனிரோஸ். தொடர்ந்து இங்கே ஒரு சில படங்களில் நடித்தவர், மலையாளத்தில் நிறைய வாய்ப்புகள் வரவே மோகன்லால், மம்முட்டி ஆகியோருக்கு ஜோடியாக நடிக்கும் அளவிற்கு பிஸியான நடிகையாக மாறினார். இடையில் தெலுங்கில் நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாகவும் அம்மாவாகவும் கூட ஒரு படத்தில் நடித்தார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சுந்தர் சி ஜோடியாக 'பட்டாம்பூச்சி' படம் மூலம் மீண்டும் தமிழுக்கு திரும்பி வந்தார். சமீபத்தில் தான் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் துவங்கி புதிய படம் ஒன்றை தயாரித்து வருகிறார். இந்த நிலையில் இன்று தனது சோசியல் மீடியா பக்கத்தில் காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் ஹனிரோஸ்.
இது குறித்து அவர் கூறும்போது, “சோசியல் மீடியாவில் என்னைப் பற்றி ட்ரோல் செய்து வரும் கமெண்ட்டுகளுக்கு நான் பதில் அளிப்பதில்லை. காரணம் அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்கிற பரிதாபம் தான். அதே சமயம் சமீபகாலமாக ஒரு நபர் தொடர்ந்து என்னை சோசியல் மீடியாக்களில் தரக்குறைவாக சித்தரிக்கும் வேலையை செய்து வருகிறார். இத்தனைக்கும் அவர் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்ட போதே என்னை அவர் ஏளனமாக விமர்சித்தார். அதன் பிறகு அவர் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வதை தவிர்த்து விட்டேன். இதனால் கோபமான அவர் தற்போது பொதுவெளியில் என் பெயரை தேவையில்லாமல் இழுத்து எனக்கு களங்கம் ஏற்படும் விதமாக நடந்து கொள்கிறார்.
ஆரம்பத்தில் நான் அமைதியாக இருந்தாலும் என்னை சுற்றி இருக்கும் எனது நலம் விரும்பிகள், இப்படி ஒருவர் உன்னைப்பற்றி அவதூறாக பேசிக் கொண்டிருக்கிறார்.. இதற்கு ஏன் பதில் சொல்லவில்லை ? ஒருவேளை இது போன்ற கமெண்ட்களை நீ ரசிக்கிறாயா என்று கேட்கத் துவங்கி விட்டனர். நிச்சயமாக இல்லை.. சம்பந்தப்பட்ட அந்த நபர் மீது நான் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப் போகிறேன். வசதி படைத்தவர், செல்வாக்கு மிக்கவர் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா ? அவர் பெயர் என்ன என்பதை நான் குறிப்பிட விரும்பவில்லை” என்று ஒரு எச்சரிக்கை வெளியிட்டுள்ளார் ஹனி ரோஸ்.