சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி |
வேட்டையன் படத்திற்கு பின் நடிகர் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‛கூலி' படத்தில் நடித்து வருகிறார். அவருடன் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடக்கிறது. அதற்காக ரஜினிகாந்த் இன்று (ஜன.7) சென்னையில் இருந்து தாய்லாந்து புறப்பட்டுச் சென்றார்.
சென்னை விமான நிலையம் வந்த ரஜினிகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது : கூலி படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் வரை முடிந்துவிட்டது. அடுத்த படப்பிடிப்பு ஜன 13ல் முதல் 25 வரை நடக்கிறது என்றார்.
அப்போது நிருபர்களில் ஒருவர், அரசியல் தொடர்பான கேள்வி ஒன்றை கேட்க முனைந்தார். இதனால் டென்ஷனான ரஜினி, ‛அரசியல் பற்றி கேள்வி கேட்க வேண்டாம் என்று நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். ஓகே, தேங்க்யூ' என்று கூறிவிட்டு நகர்ந்து சென்றார்.