ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கடந்த வாரம் மலையாளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள படம் 'ஐடன்டிட்டி'. டொவினோ தாமஸ், திரிஷா, வினய் ராய் நடித்த இந்தப் படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. கோகுலம் சினிமா நிறுவனம் இதனை வெளியிடுகிறது. இந்த படத்தை அகில் பால், அனஸ்கான் இணைந்து இயக்கி உள்ளனர். அகில் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜாக்ஸ் பிஜாய் இசை அமைத்துள்ளார்.
படத்தின் தமிழ் பதிப்பு அறிமுக நிகழ்வு நேற்று நடந்தது. இதில் நடிகை திரிஷா பேசியதாவது: முதன் முறையாக ஒரு மலையாளப் படத்தின் மேடையில் நிற்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. பொதுவாகவே மலையாளப்படங்கள் நல்ல கதையம்சம் கொண்டதாக உள்ளது. நான் நிறைய முறை சொல்லியுள்ளேன், எனக்கு மலையாளப்படங்கள் ரொம்பப் பிடிக்கும். மலையாள படங்கள் மீது நிறைய மரியாதை உள்ளது. வருடத்திற்கு ஒரு மலையாளப்படம் செய்ய வேண்டும் என நினைத்தேன். அந்த நேரத்தில் இந்த படத்தின் வாய்ப்பு வந்தது.
இந்த படத்தின் புத்திசாலித்தனமான திரைக்கதை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அகில் கதை சொன்ன விதமே பிரமாதமாக இருந்தது. டொவினோ மலையாளத்தில் மிகப்பெரிய ஹீரோ. அவர் தேர்ந்தெடுக்கும் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் நடித்தது மிக நல்ல அனுபவம். அகில் சிரித்துக் கொண்டே இருந்தாலும் மிக சீரியஸாக வேலை செய்வார். வினய் ரொம்ப காலமாகத் தெரியும். இந்தப்படம் மிக மிக நல்ல அனுபவமாக இருந்தது. நாங்கள் ஷூட் செய்யும் போதே வெற்றி பெறும் எனும் நம்பிக்கை இருந்தது. மலையாளத்தில் எப்போதும் பெண்களுக்கு நல்ல கேரக்டர்கள் எழுதுவார்கள். படத்திற்கு மலையாளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ் மக்களும் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன். என்றார்.