ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் வெளிவந்த 'புஷ்பா 2' படத்தின் வசூலை 2000 கோடியைக் கடக்க வைக்க தயாரிப்பு நிறுவனம் பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
அதனால் கூடுதலாக 20 நிமிடக் காட்சிகளை இணைத்து, அவற்றுடன் ஜனவரி 11 முதல் திரையிடுவதாக அறிவித்திருந்தார்கள். ஆனால், ஒரே நாளில் அந்த முடிவு மாற்றப்பட்டு, அதை ஜனவரி 17க்கு தள்ளி வைத்துவிட்டார்கள். தொழில்நுட்பக் காரணம்தான் அதற்குக் காரணம் என்றும் தெரிவித்துள்ளார்கள்.
ஆனால், நாளை ராம் சரண் நடித்துள்ள 'கேம் சேஞ்சர்' படமும், 12ம் தேதி பாலகிருஷ்ணா நடித்துள்ள 'டாகு மகாராஜ்', 14ம் தேதி வெங்கடேஷ் நடித்துள்ள 'சங்கராந்தி வஸ்துனம்' படங்கள் வெளிவருவதால்தான் 'புஷ்பா 2' கூடுதல் காட்சி வெளியீட்டைத் தள்ளி வைத்துள்ளதாகச் சொல்கிறார்கள்.