ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
1999ம் ஆண்டில் வெளிவந்த 'சேது' படம் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் பாலா. அதன்பின் 'நந்தா, பிதாமகன், நான் கடவுள்' ஆகிய படங்கள் அவருடைய சிறந்த படைப்புகளாக அமைந்தன. அந்தப் படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் விக்ரம், சூர்யா, ஆர்யா ஆகியோர் காலூன்றக் காரணமாக அமைந்தார்.
அதன்பின் அவர் இயக்கத்தில் வெளிவந்த 'அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார், வர்மா' ஆகிய படங்களில் 'பரதேசி' படம் மட்டுமே தரமான ஒரு படைப்பாக இருந்தது. மற்ற படங்களில் பாலாவின் முத்திரை பதிக்கப்படவில்லை. 2018ல் வெளிவந்த 'நாச்சியார்' படத்திற்குப் பிறகு கடந்த ஏழு வருடங்களுக்கும் மேலாக பாலாவின் படம் ஒன்று தியேட்டர்களில் வெளியாகவில்லை.
நாளை அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள 'வணங்கான்' படம் வெளியாகிறது. மீண்டும் பழைய பாலாவை இந்தப் படத்தில் பார்க்க முடியுமா என்று ரசிகர்களும் காத்திருக்கிறார்கள்.