2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... | மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? |

மலையாள சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகை மாலா பார்வதி. தமிழில் இது என்ன மாயம், நிமிர், மாறா, எப்.ஐ.ஆர், அன்ன பூரணி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது விக்ரமுடன் 'வீர தீர சூரன்' படத்தில் நடித்து இருக்கிறார்.
இந்த நிலையில் தனது புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாச வீடியோ தயாரித்து வெளியிட்டு வருவதாக புகார் கூறியுள்ளார். இதுகுறித்து திருவனந்தபுரம் சைபர் கிரைம் போலீசில் மாலா பார்வதி புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
என்னைப்பற்றி சமூக வலைத்தளத்தில் அவதூறான கருத்துக்கள் பதிவிடுகின்றனர். யுடியூப்பிலும் நான் நடித்த படங்களில் இருந்து புகைப்படங்களை எடிட் செய்து மோசமாக பயன்படுத்தி வீடியோக்கள் உருவாக்கி வெளியிடுகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாருடன் அந்த ஆபாச வீடியோக்களையும் ஆதாரமாக போலீஸிடம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.