ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழில் விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய 'தங்கலான்' படத்தில் நடித்திருந்த மாளவிகா மோகனன், அதை அடுத்து கார்த்தி நடிக்கும் 'சர்தார்-2' படத்தில் நடித்தவர், தற்போது தெலுங்கில் பிரபாஸ் நடிக்கும் 'ராஜா சாப்' என்ற படத்தில் நடித்து வருகிறார். மாருதி இயக்கும் இந்த படத்தில் தனது வேடம் குறித்து மாளவிகா மோகனன் கூறுகையில், ''பிரபாஸுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று எனது கனவு தெலுங்கில் அறிமுகமாகும் முதல் படத்திலேயே கிடைத்தது மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. அதோடு இந்த ராஜா சாப் படத்தில் நானே எதிர்பாராத வகையில் மிகவும் சவாலான கதாபாத்திரம் கிடைத்துள்ளது.
அதனால் இந்த படத்திற்கு பிறகு என் மீது நம்பிக்கை வைத்து இயக்குனர் இதுபோன்று தனித்துவமான கதாபாத்திரங்களை தருவார்கள். இந்த ராஜா சாப் படம் தெலுங்கில் எனக்கு மிகப்பெரிய என்ட்ரியை ஏற்படுத்திக் கொடுக்கும்'' என்று தெரிவித்திருக்கிறார். திகில் கலந்த காமெடி கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் நிதி அகர்வாலும் இன்னொரு நாயகியாக நடிக்கிறார்.