இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஆனந்த ராகம் தொடர் கடந்த 2022ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஹீரோயின் கதாபத்திரத்திற்கு அடுத்தப்படியாக, ஹீரோயினின் வாய் பேச முடியாத தங்கை அபியின் கதாபத்திரமும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த அபி கதாபத்திரத்தில் 750 எபிசோடுகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ஸ்வேதா.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிடுள்ள பதிவில், தன் வாழ்க்கையின் முக்கிய கட்டத்திற்கு வந்திருப்பதாகவும், அதற்காக தனது சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போவதாகவும் பதிவிட்டு ஆனந்தராகம் தொடரிலிருந்து விலகிவிட்டதாக கூறியுள்ளார்.
அண்மையில் தான் ரோஜா 2 தொடரிலும் ஸ்வேதா என்ட்ரி கொடுத்து நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அதற்குள் அவர் சினிமா கேரியரிலிருந்து முற்றிலும் விலகியுள்ளதாக தெரிவித்திருப்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.