ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்து 12 ஆண்டுகளுக்கு பின் வெளியான படம் 'மத கஜ ராஜா'. அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம், மனோபாலா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்தனர். விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு படமாக வெளியாகி உள்ளது. இந்த பொங்லுக்கு வெளியான படங்களில் இந்த படம் தான் நல்ல வசூலை கொடுத்து வருகிறது. இந்த படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
இந்த மேடையில் பல விஷயங்களை குறித்து மனம் திறந்து பேசினார் விஷால். "ஒரு நாள் செய்தித்தாளில் ஏதோ ஒரு விஷயம் வரும், மறுநாள் மறந்து விடுவார்கள். ஆனால் விஷாலின் நடுக்கம் உலக அளவில் ரீச் ஆகி விஷால் நல்லா இருக்கணும், விஷால் மீண்டு வரவேண்டும், விஷாலுக்கு உடம்புக்கு என்ன பிரச்சனை, விஷாலை இப்படி பார்த்ததே கிடையாது என மருத்துவர்கள், நீதிபதிகள், ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள், வருமான வரி அதிகாரிகள் இன்னும் பல வெளிநாடுகளில் இருந்து பலரும் தொடர்ந்து அன்பாக விசாரித்தார்கள். அன்று அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முடிந்தபோது எத்தனை பேர் என்னை நேசிக்கிறார்கள், நேசிக்காதவர்கள் கூட என்னை நேசிக்க ஆரம்பித்து விட்டார்கள், பிடிக்காதவர்களுக்கு கூட என்னை பிடிக்க ஆரம்பித்துவிட்டது என்பதை உணர்ந்தேன்.
12 வருடம் கழித்து ஒரு படம் வந்து மெகா பிளாக்பஸ்டர் ஆனது இந்த படமாக தான் இருக்கும். மை டியர் லவ்வரு பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விஜய் ஆண்டனி நடத்தும் கான்செர்ட் நிகழ்ச்சியில் அந்த பாடலை பாட அவர் அழைத்துள்ளார். இது என் முதல் கான்செர்ட். இது கனவிலும் நினைத்திராத ஒன்று. ரசிகர்கள் கல் எறிய மாட்டார்கள் என நம்புகிறேன்" என்றார்.