மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் | சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ |
தமிழ் திரையுலகில் அதிகம் கிசுகிசுக்கப்பட்ட ஜோடிகளில் ஒன்று தான் விஷால், வரலட்சுமி சரத்குமார் ஜோடி. இத்தனைக்கும் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் மதகஜராஜா என்கிற ஒரே படத்தில் தான் இணைந்து நடித்தார்கள். ஆனால் அந்தப் படத்தில் நடித்த பிறகு தான் இவர்களது நட்பு நெருக்கமாகி பல நிகழ்ச்சிகளுக்கு ஜோடியாகவே வந்து சென்று காதல் கிசுகிசுக்களில் சிக்கினார்கள். இருவரும் அதை வெளிப்படையாக மறுக்காததால் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்களோ என்றும் கூட நீண்ட நாட்களாக பேச்சு ஓடியது.
அதன் பிறகு விஷால் ஆந்திராவை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்வதாக நிச்சயதார்த்தம் நடந்து பின்னர் திருமணம் நடைபெறாமலேயே நின்று விட்டது. அந்த நிகழ்வுக்குப் பிறகு வரலட்சுமி சரத்குமார், விஷாலிடம் இருந்து ஒதுங்கியவர், பின்னர் சமீபத்தில் தனது நீண்ட நாள் நண்பரான நிக்கோலஸ் சக்தேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் விஷால், வரலட்சுமி நட்பு உருவாக காரணமாக அமைந்த மதகஜராஜா திரைப்படம் 12 வருடத்திற்கு பிறகு தற்போது இந்த பொங்கல் பண்டிகையில் வெளியாகி உள்ளது வெற்றி படமாகவும் அமைந்துள்ளது. இந்த படத்தின் நன்றி தெரிவிக்கும் சந்திப்பில் விஷால், வரலட்சுமி ஆகியோரும் கலந்து கொண்டனர். அப்போது வரலட்சுமி குறித்து ரொம்பவே நெகிழ்ச்சியுடன் பேசினார் நடிகர் விஷால்.
இது குறித்து அவர் பேசும்போது, “இத்தனை வருட அன்பான தோழி வரலட்சுமி, ஏதோ பிரிட்ஜில் வைத்தது போல அப்படியே பிரெஷ் ஆக இருக்கிறார். ஒரே ஒரு படம் தான் பண்ணி இருந்தாலும் கூட ஏதோ கல்லூரியில் படித்து நண்பர்களாக இருப்பது போல நாங்கள் பழகுவோம். நான் பல பிரச்னைகளை, தடைகளை சந்தித்து இருக்கிறோம். ஆனால் எப்போதும் அழும் பழக்கம் கிடையாது. கண்ணாடியின் முன் நின்று பேசுவேன். எதையும் தாண்டி சென்று விடலாம் என எனக்கு நானே பேசி தைரியம் சொல்லிக் கொள்வேன். ஆனால் நான் முதன்முறையாக கண்கலங்கியது ஹனுமன் படத்தில் வரலட்சுமி நடித்த ஒரு காட்சியை பார்த்து அதற்கு தியேட்டரில் ரசிகர்களிடம் கிடைத்த கைதட்டலை பார்த்து நான் கண் கலங்கினேன்” என்று கூறினார்.