தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

தீவிரமான காதல் படங்களில் இணைந்து நடிக்கும்போது காதல் வயப்பட்டு திருமணம் செய்த நட்சத்திர ஜோடிகள் நிறைய இருக்கிறார்கள். அஜித், சூர்யா மிகப்பெரிய உதாரணம். இந்த வரிசையில் அந்த காலத்தில் திருமணம் செய்து கொண்டவர்கள் பி.யு.சின்னப்பா - ஏ.சகுந்தலா ஜோடி.
பிரபலமான வரலாற்று கதை பிருத்விராஜன், சகுந்தலை காதல். டெல்லி பேரரசர் ஜெய்சங்கரின் மகளான சகுந்தலையை சிறிய மன்னனான பிருத்விராஜ் குதிரையிலேயே அரண்மணைக்குள் புகுந்து சகுந்தலையை கடத்தி வந்து திருமணம் செய்து கொள்ள பின்னர் அது தொடர்பாக நடந்த யுத்தங்களும், இதை பயன்டுத்தி முகலாய படையெடுப்புகள் நடந்ததும் வரலாறு. இந்த கதையைத்தான் 'பிருத்விராஜன்' என்ற பெயரில் மைசூர் அரச குடும்பத்தை சேர்ந்த பி.சம்பத்குமார் இயக்கினார்.
பிருத்விராஜனாக பி.யு.சின்னப்பாவும், சகுந்தலையாக ஏ.சகுந்தலாவும் நடித்தனர். இந்த ஜோடியுடன் டி.எஸ்.பாலையா, டி.எம்.ராமசுவாமி பிள்ளை, எம்.ஆர்.சந்தானலட்சுமி, எஸ்.டி.சுப்பையா, ஜி.எம்.பஷீர், என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், டி.கே.சம்பங்கி, டி.ஆர்.பி.ராவ், எஸ்.வேலுசாமி கவி, காளி என்.ரத்னம், சி.டி.ராஜகாந்தம், பி.எஸ். ஞானம் மற்றும் கே.கே.கிருஷ்ணவேணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
சென்ட்ரல் ஸ்டுடியோஸ் மற்றும் ஹரன் டாக்கீஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. ஏ.நடராஜன், ஜி,ராமநாதன் இசை அமைத்தனர். அந்த காலத்தில் பாரதியார் பாடல்களுக்கு ஆங்கில அரசு தடை விதித்திருந்தால் அவர் பெயர் குறிப்பிடாமல் பாடல்களை பயன்படுத்தி இருந்தார்கள். பாரத சமுதாயம் வாழ்கவே என்பது அதில் முக்கியமான பாடல். படபிடிப்பின்போது காதலித்து வந்த சின்னப்பாவும், சகுந்தலாவும் படம் வெளிவந்த பிறகு திருமணம் செய்து கொண்டனர்.