ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
நாக் அஷ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் 'கல்கி 2898 ஏடி'. இப்படம் பான் இந்தியா படமாக வெளியாகி சுமார் 1200 கோடி வசூலித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான திரைக்கதை எழுதும் வேலைகளை படத்தின் இயக்குனர் நாக் அஷ்வின் ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டாராம்.
ஜுன் மாதம் முதல் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளதாக தயாரிப்பாளர் அஷ்வினி தத் சமீபத்தில் தெரிவித்துள்ளார். அதற்காக பிரபாஸ் ஏற்கெனவே தேதிகளைக் கொடுத்துவிட்டாராம். அமிதாப், கமல் உள்ளிட்டவர்களிடமும் தேதிகளைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.
இரண்டாம் பாகத்தை 2027ம் ஆண்டுதான் வெளியிட உள்ளார்களாம். முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகத்தில் விஎப்எக்ஸ் வேலைகள் அதிகம் இருப்பதால் அதை முடிக்க பல மாதங்கள் ஆகும் என்பதே அதற்குக் காரணம்.