ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நாக் அஷ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் 'கல்கி 2898 ஏடி'. இப்படம் பான் இந்தியா படமாக வெளியாகி சுமார் 1200 கோடி வசூலித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான திரைக்கதை எழுதும் வேலைகளை படத்தின் இயக்குனர் நாக் அஷ்வின் ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டாராம்.
ஜுன் மாதம் முதல் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளதாக தயாரிப்பாளர் அஷ்வினி தத் சமீபத்தில் தெரிவித்துள்ளார். அதற்காக பிரபாஸ் ஏற்கெனவே தேதிகளைக் கொடுத்துவிட்டாராம். அமிதாப், கமல் உள்ளிட்டவர்களிடமும் தேதிகளைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.
இரண்டாம் பாகத்தை 2027ம் ஆண்டுதான் வெளியிட உள்ளார்களாம். முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகத்தில் விஎப்எக்ஸ் வேலைகள் அதிகம் இருப்பதால் அதை முடிக்க பல மாதங்கள் ஆகும் என்பதே அதற்குக் காரணம்.