தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

மலையாள திரையுலகம் கடந்த வருடம் சில அற்புதமான படங்களையும் அபரிமிதமான வசூலித்த படங்களையும் கொடுத்து ஆச்சரியப்படுத்தியது. அதிலும் 'பிரேமலு, மஞ்சும்மேல் பாய்ஸ்' போன்ற சிறிய பட்ஜெட்டில் பிரபலம் இல்லாத நடிகர்கள் நடித்த படங்கள் எல்லாம் 100 கோடி, 200 கோடி என வசூலித்தன. அதேபோல கடந்த வருட இறுதியில் உன்னி முகுந்தன் நடிப்பில் வெளியான 'மார்கோ' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் ஆசிப் அலி நடிப்பில் மம்முட்டி சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த 'ரேகசித்திரம்' என்கிற திரைப்படம் வெளியானது. கதாநாயகியாக அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். 80களின் பின்னணியில் நடக்கும் கதையாக இந்தப்படம் உருவாகியுள்ளது. புலனாய்வு திரில்லர் படமாக உருவாகி இருந்த இந்த படத்தை ஜோபின் டி சாக்கோ என்பவர் இயக்கியுள்ளார். இவர் மம்முட்டி நடித்த 'தி பிரிஸ்ட்' என்கிற ஹாரர் படத்தை இயக்கியவர்.
இந்த படம் வெளியான நாளிலிருந்து இதற்கு மவுத் டாக் மூலமாக நல்ல வரவேற்பு கிடைத்து வந்த நிலையில் தற்போது வெளியான ஒரு வாரத்திற்குள்ளாகவே 50 கோடி வசூல் களத்தில் இந்த படம் இணைந்துள்ளது. இந்த 2025ல் வெளியான மலையாள படங்களில் முதலில் 50 கோடி வசூலித்த படம் என்கிற பெயரையும் இந்த படம் தட்டி சென்றுள்ளது.