ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்குத் திரையுலகத்தில் பான் இந்தியா படங்கள் என்று சொல்லிக் கொண்டு வந்தாலே வெளியான முதல் நாளிலேயே 100 கோடி, 150 கோடி வசூல் என சொல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்தப் படங்கள் தெலுங்கு மாநிலங்களில் மட்டுமே ஓரளவிற்கு வரவேற்பைப் பெறுகின்றன. தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும், கர்நாடகாவில் பெங்களூருவைத் தவிர பிற இடங்களிலும் பெரிய வரவேற்பைப் பெறுவதில்லை.
இப்படி வெளியாகும் வசூல் விவரங்கள் பெரும்பாலும் தவறான தகவலாகவே இருப்பதாக தெலுங்கு பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களிலும் தெரிவிக்கிறார்கள். கடந்த வாரம் வெளியான 'கேம் சேஞ்ஜர்' படம் முதல் நாளில் 186 கோடி வசூலைப் பெற்றதாக போஸ்டர் வெளியானது. அது உள்ளிட்ட மற்ற சில படங்களின் இப்படியான போஸ்டர்கள்தான் தெலுங்கில் பிரபல தயாரிப்பாளர்களிடம் வருமான வரி சோதனை நடைபெற காரணமாக அமைந்தது என தகவல் வெளியாகி உள்ளது.
இப்படியான போலி போஸ்டர்களை வெளியிடுவதை தெலுங்கு தயாரிப்பாளர்கள் தவிர்க்க வேண்டும் என்ற குரல் தெலுங்கு சினிமா ரசிகர்களிடமிருந்து எழுந்துள்ளது. ஹீரோக்களுக்கு இடையே உள்ள போட்டியால்தான் இப்படியான போஸ்டர்களை வெளியிடுவதாக திரையுலகினரும் குறைபட்டுக் கொள்கிறார்கள். போலி வசூலில் வந்த போஸ்டர் சண்டை வருமான வரி சோதனையில் வந்து நிற்கிறது.