இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
விஜய் நடித்த 'வாரிசு', ஷங்கர் இயக்கிய 'கேம் சேஞ்ஜர்' படங்களைத் தயாரித்த பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு வீடு, அலுவலகங்களில் சில தினங்களுக்கு முன்பு வருமான வரி சோதனை நடைபெற்றது. அவர் மட்டுமல்லாது மேலும் சில தெலுங்கு தயாரிப்பாளர்களிடமும் சோதனை நடைபெற்ற தெலுங்குத் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் வருமான வரி சோதனை பற்றி தில் ராஜு பேசியுள்ளார். “2008க்குப் பிறகு 16 வருடங்கள் கழித்து இப்போதுதான் எங்களது இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இதனிடையே எனது கணக்கு ஆவணங்களை மூன்று முறை சோதனையிட்டுள்ளனர். வியாபாரம் செய்பவர்களிடம் வருமான வரி சோதனை நடைபெறுவது வழக்கமான ஒன்று. நடைபெற்ற வருமான வரி சோதனையில் ஆவணங்கள், பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக வந்த தகவல்கள் தவறானவை. அப்படி எதுவும் நடக்கவில்லை. தவறான ஆவணங்கள், பணம் ஆகியவை என என்னிடம் எதுவும் கிடையாது.
என்னிடம் மற்றும் எனது குடும்பத்தினரிடம் என மொத்தமாக 20 லட்ச ரூபாய் பணம் வைத்திருந்தோம். அதற்கான உரிய ஆவணங்களையும் சமர்ப்பித்தோம். கடந்த ஐந்து வருடங்களில் நான் எந்த சொத்தையும் வாங்கவில்லை. எனது திரைப்படத் தயாரிப்பில் உள்ள அனைத்து விவரங்களையும் விவரமாக எடுத்து சொன்னேன். எங்களது ஆவணங்கள் அனைத்தும் சரியானவையாகவும், தெளிவாகவும் இருந்ததாக சொன்னார்கள்,” என்று தெரிவித்துள்ளார்.