ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
2025ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. தமிழ் சினிமா துறையைச் சேர்ந்த நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனா ஆகியோருக்கு பத்மபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், அவர்களுக்கு தமிழ்த் திரையுலகத்திலிருந்து ஒரு சிலர் மட்டுமே வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் தெலுங்கு சினிமாவில் பத்மபூஷண் விருது பெற்ற நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு நேற்றிரவே ஆந்திர முதல்வர் உள்ளிட்ட பல நடிகர்கள், நடிகைகள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அதோடு அவர்களில் சிலர் தமிழ் சினிமாவில் விருதுகளை வாங்கிய அஜித் மற்றும் ஷோபனாவுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
ஆனால், இங்குள்ள சீனியர் நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட பலரும் அஜித்துக்கும், ஷோபனாவுக்கும் இன்னும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவிக்காமல் இருக்கிறார்கள். இது குறித்து சமூக வலைத்தளங்களிலும் அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாது மற்ற சினிமா ரசிகர்களும் பகிர்ந்துள்ளார்கள்.
இந்திய நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விருதகளைப் பெற்றவர்களை வாழ்த்துவதில் ஏன் இந்த பாரபட்சம் ?