குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி |

இந்திய அளவில் வழங்கப்படும் விருதுகளில் உயரிய விருதுகளாகக் கருதப்படுவது 'பத்ம' விருதுகள். முதற்கட்ட விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்றது.
தமிழ் நடிகர் அஜித், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, ஹிந்தி நடிகர் சேகர் கபூர், நடிகை ஷோபனா உள்ளிட்டவர்கள் நேற்று ஜனாதிபதி திரவுபதி முர்முவிடமிருந்து பத்மபூஷன் விருதைப் பெற்றார்கள்.
தெலுங்கு நடிகரான பாலகிருஷ்ணா, தெலுங்கு வழக்கப்படி 'பஞ்சகட்டு' பேட்டி, பட்டு சட்டை அணிந்து விருதைப் பெற்றார். 57 வருடங்களுக்கு முன்பாக அவரது அப்பா என்டி ராமராவ் பத்மஸ்ரீ விருதைப் பெற்றபோது அணிந்த 'பஞ்சகட்டு' கலாச்சார ஆடையையே பாலகிருஷ்ணா அணிந்ததை தெலுங்கு மக்கள் நினைவு கூர்ந்துள்ளார்கள்.
ஒரே குடும்பத்தில் பத்ம விருதுகளைப் பெறுவது அபூர்வமாக நடக்கும் ஒன்று. அப்பா என்டிஆர் பத்மஸ்ரீ விருதையும், மகன் பாலகிருஷ்ணா பத்மபூஷன் விருதையும் பெற்றுள்ளார்கள். என்டிஆருக்கு இந்திய அரசு வழங்கும் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ஏற்கெனவே கோரிக்கை வைத்துள்ளார்.