தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

2025ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. தமிழ் சினிமா துறையைச் சேர்ந்த நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனா ஆகியோருக்கு பத்மபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், அவர்களுக்கு தமிழ்த் திரையுலகத்திலிருந்து ஒரு சிலர் மட்டுமே வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
கலை, அறிவியல் சமூகப்பணி, பொதுப்பணி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நாட்டின் உயிரிய விருதான பத்ம விபூஷண், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ, ஆகிய விருதுகளை மத்திய அரசு நேற்று (ஜன.,25) அறிவித்தது. இதில் கலைத்துறைக்கான பிரிவில் நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனா ஆகியோருக்கு பத்மபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டன. இவர்களுக்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நடிகர் அஜித்துக்கு தென்னிந்திய நடிகர்கள் சங்கம், நடிகர்கள் தனுஷ், கார்த்தி, விக்ரம் பிரபு, ஜான் கொகென், சரத்குமார், சசிகுமார், சிரஞ்சீவி, நந்தா, பாபி சிம்ஹா, பாலாஜி முருகதாஸ், நடிகைகள் பார்வதி, வரலட்சுமி சரத்குமார், இயக்குனர்கள் ராஜமவுலி, கார்த்திக் சுப்பராஜ், எஸ்ஜே சூர்யா, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பல்வேறு வாழ்த்துகள் குவிந்து வருவதால் #Ajithkumar, #Ajith,
#PadmaBhusan மற்றும் #PadmaBhusanAjithkumar உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள்
தொடர்ச்சியாக டிரெண்ட்டிங்கில் இருந்து வருகின்றன.