ஸ்ரீதேவியை பார்த்து இன்ப அதிர்ச்சியான சுதீப் ; உஷார் படுத்திய விஜய் | அடூர் கோபாலகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும் ; பின்னணி பாடகர் சங்கம் கோரிக்கை | வேட்பு மனுவை நிராகரித்த தயாரிப்பாளர் சங்கம் ; நீதிமன்றத்தை நாடும் பெண் தயாரிப்பாளர் | இந்த ஆட்களை எல்லாம் நிச்சயமாக எல்சியுவில் சேர்க்க மாட்டேன் ; லோகேஷ் கனகராஜ் திட்டவட்டம் | பிளாஷ்பேக்: திறமையான திரைக்கதை, திகைக்க வைக்கும் நடிப்பால் வென்று காட்டிய “தெய்வமகன்” | திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? |
பாலிவுட்டின் நம்பர் ஒன் முன்னணி நடிகராக வலம் வரும் ஷாருக்கான் மும்பையில் மன்னாட்டில் ஒரு பிரமாண்டமான பங்களாவில் வசித்து வருகிறார். கிட்டத்தட்ட 2446 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள நிலத்தில் அவர் ஆடம்பரமான வீடு கட்டியுள்ளார். அதே சமயம் அந்த நிலத்தை வேறு ஒருவரிடம் இருந்து தன்னுடைய மற்றும் தனது மனைவியின் பெயரில் 99 வருட குத்தகையாக 2001ல் அவர் பெற்றிருந்தார். கடந்த 2019ல் அதன் ஓனர்ஷிப் மாற்றுவதற்காக அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையாக அதன் மதிப்பில் 25 சதவீதம் தொகையை அதாவது 27.5 கோடி ரூபாயை அரசுக்கு வரியாக செலுத்தி இருந்தார்.
ஆனால் பின்னர் அவர் வரி கணக்கை சரிபார்த்த போது தன்னிடம் கூடுதலாக வசூலித்து இருப்பது தெரியவந்தது. இது குறித்து கலெக்டர் அலுவலகம் வழியாக மஹாராஷ்டிரா அரசுக்கு தகவல் தெரிவித்தார் ஷாருக்கான். அதனை ஆய்வு செய்த மும்பை அரசு ஷாருக்கான் 9 கோடி ரூபாய் கூடுதலாக செலுத்தி இருப்பதை கண்டுபிடித்துள்ளதுடன் விரைவில் அந்த தொகை ஷாருக்கானுக்கு திருப்பி தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.