பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! |
திருச்சியில் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கும் போதே டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதில் வெற்றி பெற்றவர் சிவகார்த்திகேயன். அப்படியே அதே டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக ஆறு வருடங்கள் பணியாற்றினார். இடையில் எம்பிஏவும் படித்து முடித்தவர், 2012 பிப்ரவரி 3ம் தேதி வெளிவந்த 'மெரினா' படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார்.
அதன்பின் “எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினி முருகன், நம்ம வீட்டுப் பிள்ளை, டாக்டர், டான், மாவீரன்,' என வெற்றிப் படங்களில் நடித்தார். கடந்த வருடம் அவர் நடித்து வெளிவந்த 'அமரன்' படம் 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வசூல் சாதனை படைத்தது.
தமிழ் சினிமாவில் தற்போது டாப் 10 பட்டியலில் இருக்கும் சிவகார்த்திகேயன் சினிமாவில் வந்து இன்றுடன் 13 வருடங்கள் நிறைவடைகிறது. இப்போது அவர் 24 மற்றும் 25வது படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். 25வது படமாக 'பராசக்தி' படம் உருவாகி வருகிறது.
சினிமாவில் எந்தவிதமான பின்புலமும் இல்லாமல், தனது திறமையால், கடுமையான உழைப்பின் மூலம் முன்னேறியுள்ள சிவகார்த்திகேயன் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ள ஒருவராக இருக்கிறார்.