கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. இன்று அவருடைய 43வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அதை முன்னிட்டு நள்ளிரவில் அவருடைய 49வது படத்தின் அறிவிப்பு வெளியானது. 'பார்க்கிங்' படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் அப்படத்தை இயக்குகிறார்.

அதற்கடுத்து சற்று முன் அவருடைய 50வது படம் குறித்த அறிவிப்பு வெளியானது. இப்படத்தைத் தனது சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான அட்மன் சினி ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து நடிக்கிறார் சிம்பு. 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இப்படத்தை இயக்க யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தை கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. அது குறித்த அறிவிப்பும் வெளியானது. ஆனால், அதன்பின் அதிலிருந்து கமல் விலகிவிட்டார். பின்னர் வேறு தயாரிப்பாளர்களிடமும் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் சிம்புவே தயாரிப்பில் இறங்கிவிட்டார். இப்படம் ஒரு சரித்திரப் படமாக எடுக்கப்பட உள்ளது.
சிம்புவின் பிறந்தநாளில் அடுத்தடுத்து அவரது 49 மற்றும் 50வது படங்களின் அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.