ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
இந்திய இசையமைப்பாளர்களில் பிரபலமானவர் இளையராஜா. 1500 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இவரது இசைக்கு வெளி நாடுகளிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் ரஷ்ய நடனக் கலைஞர்கள் தமிழகத்தில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் இளையராஜாவை சென்னையில் உள்ள அவரது ஸ்டுடியோவில் சந்தித்து, இளையராஜாவின் புகழ்பெற்ற பாடல்களுக்கு நடனம் ஆடினார்.
குறிப்பாக ‛மீரா' படத்தில் வரும் ‛ஓ பட்டர்பிளை...' என்ற பாடலுக்கும், ‛சொல்ல துடிக்குது மனசு' படத்தில் வரும் ‛பூவே செம்பூவே...' என்ற பாடலுக்கும் தங்களது நேர்த்தியான நடனத்தால் இளையராஜா மற்றும் பார்வையாளர்களை வசீகரித்தனர்.
இதுதொடர்பான வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த இளையராஜா, ‛‛ரஷ்யாவில் இருந்து வந்து எனது ஸ்டுடியோவில் சிறப்பான நடன நிகழ்ச்சியை நடத்தி காண்பித்த கலைஞர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். அவர்களின் நடனம் நளினமாகவும், உணர்வுப்பூர்வமாகவும், இதயத்தை தொடுவதாகவும், வசீகரிக்க கூடியதாகவும் இருந்தது'' என குறிப்பிட்டுள்ளார்.