ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் |
தமிழில் ஹே சினாமிகா என்ற படத்திற்கு பிறகு காந்தா என்ற படத்தை தயாரித்து நடிக்கப் போகிறார் துல்கர் சல்மான். கடந்த அக்டோபர் மாதத்தில் தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் அவர் நடித்து திரைக்கு வந்த லக்கி பாஸ்கர் என்ற படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்திருந்தார். தற்போது மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கிறார் துல்கர் சல்மான். அப்படத்தின் பூஜை நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றுள்ளது.
ஆகாம்சலோ ஒகதாரா என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை பவன் சதினேனி என்பவர் இயக்குகிறார். சாத்விகா வீரவள்ளி நாயகியாக நடிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என நான்கு மொழிகளில் தயாராகிறது. இந்த படத்தை இந்த ஆண்டு இறுதியில் வெளியிட்ட திட்டமிட்டுள்ளார்கள். லக்கி பாஸ்கர் ஹிட்டுக்கு பிறகு துல்கர் சல்மான் நடிக்கும் படம் என்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.