திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
அஜித் நடித்த 'விடாமுயற்சி' படம் நேற்று வெளியானது. இந்த படத்தில் நடித்த திரிஷா, இசை அமைத்த அனிருத் ஆகிய இருவரும் நேற்று குரோம்பேட்டையில் உள்ள ஒரு தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தனர். பின்னர் படம் முடிந்து வெளியில் வந்த அனிருத் தனது காரை எடுக்கச் சென்றபோது அது போக்குவரத்து போலீசாரால் பூட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அங்கு வந்த போக்குவரத்து போலீசார் 'நோ பார்க்கிங்'கில் வாகனம் நிறுத்தப்பட்டிருப்பதாக கூறி ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். அதை கட்டிவிட்டு காரை எடுத்துச் சென்றார் அனிருத். அனிருத் தாமதமாக படத்திற்கு வந்ததால் தியேட்டர் பார்க்கிங் நிறைந்து விட்டது. அதனால் வெளியில் காரை நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார். திரிஷா உள்ளிட்ட மற்றவர்கள் முன்னமே வந்து விட்டதால் அவர்கள் தியேட்டர் பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்தி விட்டுச் சென்றுள்ளர்.
நேற்று மட்டும் சென்னையில் 'விடாமுயற்சி' படம் பார்க்க வந்து நோ பார்க்கில் வாகனங்களை நிறுத்தியவர்களிடமிருந்து 50 ஆயிரத்துக்கும் மேல் நோ பார்க்கிங் அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.