பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் |
தெலுங்கில் நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் சமீபத்தில் தண்டேல் என்கிற திரைப்படம் வெளியானது. இயக்குனர் சந்து மொண்டேட்டி இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ஓரளவு வரவேற்பை பெற்று நாக சைதன்யாவுக்கு கம்பேக் படம் என்று சொல்லும் அளவிற்கு அமைந்துள்ளது. இந்த நிலையில் இணையதளத்தில் இந்த படம் லீக் ஆனது ஒரு பக்கம் அதிர்ச்சியை அளித்துள்ளது என்றால், ஆந்திராவில் இருந்து சென்னை வந்த ஆந்திர அரசின் போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்றில் இந்த படம் ஒளிபரப்பப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் பன்னி வாஸ் ஆந்திர அரசு போக்குவரத்து கழக சேர்மனுக்கு அளித்துள்ள புகாரில், “ஆந்திர அரசு பேருந்தில் தண்டேல் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது கடும் அதிர்ச்சியை அளிக்கிறது. இது முறையற்ற செயல் மட்டுமல்ல. அராஜகமான, சகிக்க முடியாத செயலும் கூட. அது மட்டுமல்ல இந்த படத்திற்கு பின்னணியில் இருந்து கடுமையாக உயிரைக் கொடுத்து உழைத்த ஆயிரக்கணக்கானோரின் உழைப்பை அவமரியாதை செய்யும் விதமாக இருக்கிறது. தயவு செய்து இந்த முறையற்ற செயலில் இறங்கியவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.