ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மும்பையை சேர்ந்த ஒரு செல்வந்தர் குடும்பத்தை சேர்ந்தவர் நிஷா பாட்டீல். இளம் வயதில் இருந்தே சஞ்சய் தத்தின் தீவிர ரசிகையாக இருந்துள்ளார். அவரது படங்களை முதல் நாள் முதல் ஷோ பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது 62வது வயதில் இறந்தார்.
அதன் பிறகு அவரது குடும்பத்தினர் அவரது சொத்துகள் பற்றி கணக்கெடுக்கையில் இறப்பதற்கு முன்பு தனது வங்கி கணக்கில் உள்ள பல கோடி ரூபாயை சஞ்சய் தத்தின் வங்கி கணக்கிற்கு மாற்ற வேண்டும் என்று வங்கிக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதோடு தன் பெயரில் உள்ள சொத்துகள் அனைத்தையும் சஞ்சய் தத்திடம் கொடுத்து விட வேண்டும் என்றும் உயில் எழுதி வைத்துள்ளார். இவற்றின் மொத்த மதிப்பு 72 கோடி ரூபாய்.
இதுகுறித்து அந்த குடும்பத்தினரும், வங்கியும் போலீசில் புகார் அளித்தது. இதை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் நிஷா பாட்டீல் தனது கடைசி காலத்தில் மனநலம் சரியில்லாமல் இருந்ததும், ஆனால் அவர் தீவிர சஞ்சய் தத் ரசிகர் என்பதும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து இது தொடர்பாக சஞ்சய் தத்திடம் போலீசார் பேசி உள்ளனர். இதை கேட்டு சஞ்சய் தத் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அடைந்துள்ளார்.
இதற்கு முன்பு தான் அந்த ரசிகையை ஒரு முறை கூட நேரில் பார்க்கவில்லை என்று போலீசாரிடம் தெரிவித்த சஞ்சய் தத், இந்த விவகாரம் தனக்கு வேதனை தருகிறது என தெரிவித்துள்ளார். மேலும் அவரது சொத்துகள் எதுவும் தனக்கு வேண்டாம் என்றும் கூறிவிட்டார்.
சஞ்சய் தத்தின் வழக்கறிஞர் இது குறித்து கூறும்போது, ''நாங்கள் அந்த பணத்திற்கு உரிமை கோரவில்லை. சொத்துகள் அந்த ரசிகையின் குடும்பத்திற்குக் கிடைக்கத் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்தார்.